Actress Poorna Mother Complaint
Actress Poorna Mother Complaint

திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட முயற்சித்ததாக நடிகை அளித்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Actress Poorna Mother Complaint : பிரபல மலையாள நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷாம்னா காசிம். இவர் தமிழில் பூர்ணா என்ற பெயரில் பல படங்களில் நடித்து வருகிறார்.

மெட்டிஒலி திருமுருகன் இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். மேலும் தற்போது விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் சசிகலா ஆக நடிக்கிறார்.

இந்த நிலையில் பூர்ணாவின் அம்மா போலீஸில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புகாரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரபீக் என்பவர் பூர்ணாவிற்கு போன் செய்து தான் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பேசியுள்ளார்.

நாய்களுடன் படுத்து உருண்டு விளையாடும் சமந்தா – இணையத்தில் வைரலாகும் வீடியோ

மேலும் தன்னுடைய புகைப்படத்தை அனுப்புகிறேன் என கூறி வேறு ஒருவரின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்னர் பூர்ணாவின் குடும்பத்தாரும் ரபீக்கும் நன்றாக பழகியுள்ளனர். இந்த நேரத்தில் திருமணம் பற்றிப் பேசுவது போல ரபீக் உட்பட 6 பேர் கடந்த மூன்றாம் தேதி பூர்ணாவின் என் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கே அவர்களது வீடு, வாகனங்களை வீடியோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு லட்சம் பணம் கேட்டுள்ளனர். இதனால் ரபீக் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

பணம் கொடுக்க முடியாது என மறுத்ததால் குடும்பத்தோடு அழித்து விடுவோம் என மிரட்ட தொடங்கியுள்ளனர். இதனால் பூர்ணாவின் அம்மா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவரின் புகார் மனுவை ஏற்று ரபீக் உட்பட மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து பூர்ணா கூறியதாவது இதுபோன்ற மோசடி வேலைகள் செய்யும் கும்பல்களைப் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் தான் போலீசில் புகார் அளித்தோம் என கூறியுள்ளார்.

பிரபல நடிகையிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறிக்க முயற்சித்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.