நடிகை கல்யாணி தற்போது வெளியிட்டிருக்கும் லேட்டஸ்டான போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷினின் மகளான நடிகை கல்யாணி தென்னிந்திய நடிகைகளில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

கல்யாணி தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவருக்கும் பரிச்சயமான இவர் இரண்டாவது படமாக சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதுமட்டுமின்றி இருமுகன் படத்தில் உதவி கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

மேலும் ஒரு சில பிரபல விளம்பரங்களிலும் நடித்து வரும் இவர் தற்போது விதவிதமாக போட்டோ ஷூட் செய்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கல்யாணி தற்போது எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இணையத்தில் பரவி வருகிறது.