மும்பையில் செட்டிலாகி விட்டதாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் சூர்யா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்து நடிக்க உள்ள 5 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியது. மேலும் இவர் பிள்ளைகள் படிப்பிற்காக மும்பையில் குடியேறிய நிலையில் சூர்யா அங்கு செட்டிலாகி விட்டதாக தகவல் பரவியது.
இப்படியான நிலையில் இவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது மும்பையில் செட்டில் ஆகவில்லை, பிள்ளைகள் படிப்புக்காக இடமாற்றம் செய்துள்ளோம்.
மேலும் புதியதாக கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நண்பர் மாதவனுடன் இணைந்து கோல்ஃப் விளையாட்டை கற்று கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.