நடிகர் சுந்தர் சி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Actor Sundar C Admitted in Hospital : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் சுந்தர் சி. இவர் தொடர்ந்து பல படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார்.
இவருடைய மனைவி குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். இவரை ஆதரித்து இயக்குனர் சுந்தர் சி பிரச்சாரம் செய்தார். ஆனால் தனக்கு அரசியலுக்கு சம்மதமில்லை, என்னுடைய மனைவிக்காக மட்டுமே பிரச்சாரத்தின் ஈடுபடுகிறேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.