நடிகர் ரஜினிகாந்த் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினி அவர்கள் தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது பேட்டியாளர்களை சந்தித்த ரஜினி “ஆறு வருஷம் கழிச்சு ஏழுமலையானை தரிசனம் செஞ்சது திவ்யா அனுபவமா இருந்துச்சு என்று பதில் அளித்து சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகிய வைரலாகி வருகிறது.