Poorna is Scared to Get Married : தமிழ் சினிமா சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பூர்ணா தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் திருமண மோசடி கும்பலொன்று ஏமாற்ற முயற்சித்து காவல்துறையில் புகார் அளிக்க அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தமிழ் மலையாள சினிமாவில் பரபரப்பானது இந்த சம்பவத்திற்கு பிறகு முதன்முதலாக பேட்டியளித்துள்ள பூர்ணா அந்த பேட்டியில் அவர்… எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர் அப்போது அறிமுகமானது தான் இந்த மோசடி கும்பல்.
இரு குடும்பத்தினர் சம்மதம் கிடைத்த நிலையில், நான் திருமணம் செய்ய இருப்பவரிடம் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினேன். பின்னர் நடந்த விஷயங்களால் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது.
பாலிவுட்டில் தனுஷின் அடுத்த படத்தில் இணையும் அக்ஷய் குமார்! பட்டைய கிளப்ப போகுது
அந்தக் கும்பலின் பேசிய பேச்சுகளை நினைத்தாலே பயமாய் இருக்கிறது இந்த உலகில் யாரை நம்புவது என்று தெரியாமல் தவிக்கிறேன்.
ஆகையால் இப்போதைக்கு திருமணம் குறித்து பேசாதீர்கள் என்று குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டேன் எனக்கு திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே பயமா இருக்குது. அந்த பயம் போக கொஞ்ச நாள் ஆகும். தற்பொழுது நான் நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.