ஒரே படத்தில் அஜித் சூர்யா மற்றும் கமல் என மூவரையும் நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு. சமீபத்தில் கூட இந்த படம் ரீ ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. கௌதம் மேனன் இது குறித்த கதையை உலகநாயகனிடம் சொல்ல அவர் உடனடியாக ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் வேட்டையாடு விளையாடு ராகவன், காக்க காக்க அன்பு செல்வன் மற்றும் என்னை அறிந்தால் சத்தியதேவ் என மூன்று கேரக்டர்களையும் ஒன்றிணைக்க முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
அப்படி என்றால் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் அஜித் சூர்யா மற்றும் கமல் என மூவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.