10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் அப்பாஸ் ரீ என்ரி..

கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி என பல படங்களில் நடித்தார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர், இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார்.
தற்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார்.
கவுரி பிரியா, கதாநாயகியாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி மரியா ராஜா இளஞ்செழியன் தெரிவிக்கையில்,
‘இது நகைச்சுவை நிரம்பிய குடும்பப்படமாக இருக்கும். இப்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ், இதுவரை பண்ணாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்பாஸ் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதை இப்போது சொல்ல இயலாது. அவருடைய கம்பேக் சரியானதாக இருக்கும். இது முழுமையான பொழுது போக்கு படம்’ என்றார்.
