ஒரு கதை சொல்லட்டா சார் என விஜய் சேதுபதி மாஸ் காட்டிய விக்ரம் வேதா வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
3 Years of Vikram Vedha : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் விஜய் சேதுபதி. இவர் முதல்முறையாக வில்லனாக மிரட்டியிருந்தார் திரைப்படம் விக்ரம் வேதா.
மாதவன் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை புஷ்கர் காயத்ரி என்ற இயக்குனர்கள் இயக்கிய இருந்தனர். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
இதனை ரசிகர்கள் #3YearsofVikramVedha என கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மிரட்டலான பிஜிஎம் உடன் மாதவன் முன்பு கைதியாக அமர்ந்து ஒரு கதை சொல்லட்டா சார் என கேட்கும் அந்த மாஸான வீடியோ கிளிப்பை பதிவிட்டு விக்ரம் வேதா நினைவை பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.