வைகைப்புயல் வடிவேலு மீண்டும் தான் சினிமாவில் நடிக்க இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
காமெடி என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் கண் முன் வந்து நிற்பவர் வடிவேலு. இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்களின் குல தெய்வம் என்று கூட சொல்லலாம்.
ஆனால் வடிவேலுவின் நேரம் கடந்த சில வருடங்களாக அவரை எந்தவொரு படத்திலும் கமிட்டாக விடலாம் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது வடிவேலு கமல்ஹாசன் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மேடையில் பேசிய அவர் கமலின் அடுத்த படமான ” தலைவன் இருக்கிறான் “ என்ற படத்தில் நான் நடிக்கிறேன் என அறிவித்துள்ளார்.
இதே நிகழ்ச்சியில் ஷங்கரும் கலந்து கொண்டிருந்தார் என்பதால் இவர்களுக்கு இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது என கூறப்படுகிறது.
வடிவேலு மீண்டும் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.