Bomb Blast Warning to Thalapathy Home : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர்களை உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
தளபதி விஜய்க்கு ஏதாவது ஒன்று நாள் ஒட்டுமொத்த ரசிகர்களும் பதறிப் போய் விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக விஜய்யின் சாலிகிராமம் மற்றும் நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் இரண்டு வீட்டிலும் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.