திருமணமான ரெண்டே மாதத்தில் புதிய வீடு வாங்கி குடியேறியுள்ளனர் சஞ்சீவ், ஆலியா மானஸா ஆகியோர்.
தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஆகியோர்.
இவர்கள் இருவரும் சின்சியராக காதலித்து வந்த நிலையில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமணமாகி விட்டதையே சில மாதங்களுக்கு முன்னர் தான் தெரியப்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது இவர்கள் புதிய வீடு வாங்கி குடியேறியுள்ளனர். இதனை போட்டோவாக வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.