லக்னோவை சேர்ந்த அந்த இளைஞருக்கு பெரியவர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்து வைத்தனர். திருமண வேலைகளும் நல்லபடியாக நடந்து கொண்டு இருந்தது.
அப்போது, திருமண நாள் நெருங்கி வரும் நிலையில், திடீரென மாப்பிள்ளை தனக்கு பைக்கும், தங்க சங்கிலியும் வேண்டும்.
இரண்டையும் தந்தால் தான் நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றார். இதை கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பைக்கும், தங்க சங்கிலியும் தரவில்லை என்றால் கல்யாணத்தை நிறுத்தி விடுவேன் என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் இவ்வாறு மாப்பிள்ளை கூறியது பெண் வீட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த மாப்பிள்ளைக்கு யாரோ தலையில் பாதி மொட்டை அடித்துள்ளனர். இதை பார்த்து அதிர்ந்த மாப்பிள்ளை போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரித்ததில் பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு எங்களை மிரட்டியதற்கு எங்களுக்கு கோவம் வந்தது ஆனால் இவ்வாறு பாதி மொட்டை நாங்கள் அடிக்கவில்லை என்று கூறினர். இதனால் போலீசார் யார் அந்த செயலை செய்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.