Viswasam Dailogue : ஒத்தைக்கு ஒத்த வாடா என அஜித் அழைப்பது யாரை? விஜயையா? ரஜினியையா? என பிரபல தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பி.டி செல்வகுமார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு இடையே போட்டிகள் இருப்பது சகஜமான ஒன்று.
இந்நிலையில் நேற்று வெளியான விசுவாசம் ட்ரைலரின் இறுதியில் அஜித் ஒத்தைக்கு ஒத்தை வாடா என வசனம் பேசி இருந்தார்.
இது குறித்து பிரபல தயாரிப்பாளரான பி.டி செல்வகுமாரிடம் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
ஒரு காலத்தில் ரஜினி மாஸான நடிகராக யாராலும் அடித்து கொள்ள முடியாத நடிகராக இருந்தார். ஆனால் அஜித், ரஜினியை விட ஒரு படி மேலே உள்ளார் தளபதி விஜய்.
இவர்களின் படங்களை விட அதிக வசூல் கொடுப்பது தளபதி விஜயின் படங்கள் தான். அதற்கு சான்று தான் சர்கார், மெர்சல் போன்ற படங்கள்.
அதனால் அஜித் ஒத்தைக்கு ஒத்தை வாடா என அழைப்பது ரஜினியாக இருக்கலாம் என கூறியுள்ளார். அஜித்தின் விசுவாசம் படமும் ரஜினிகாந்தின் பேட்ட படமும் ஜனவரி 10-ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.