Swine Flu : தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்றவற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் இதற்கான அறிக்கையை வரும் நாம் வரும் 20ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு , பன்றி காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழகத்தில் தற்சமயம் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்றவை அதிக அளவில் பரவி வருகிறது .
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரிதாபமாக இறந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் , இது தொடர்பாக போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் டெங்கு , பன்றிக் காய்ச்சலால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் ? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?
மேலும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் இவற்றை கட்டுபடுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன? என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.