Virat Kohli Advice : வரும் 21-ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மூன்று கிரிக்கெட் தொடர் விளையாட உள்ளது.
அந்த தொடருக்காகவே இந்திய அணி நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கு அணியில் மாற்றி மாற்றி ஓய்யு அளித்தது.
இங்கிலாந்துடனான நடந்து முடிந்த தொடரில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்ஸ்மேன்கள் சரியா ஒற்றுமையுடன் விளையாடவில்லை.
இந்நிலையில் அடுத்ததாக தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் ஒற்றுமையாக விளையாடி சிறந்த ஆட்டத்தை வெளிக் காட்ட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய அணி வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் மே.தீ., அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளை பார்த்தால் இங்கிலாந்துடனான போட்டியை காட்டிலும் மே.தீ, அணியுடனான போட்டியில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.
ஆனால், நடந்து முடிந்த போட்டியை பற்றியே பேசிக்கொண்டு இருக்க கூடாது. நம்முடைய திட்டம் எப்போதும் நடைபெறக் கூடிய தொடரை பற்றி இருக்க வேண்டும் என்றும் நடந்து முடிந்த தோல்வி மற்றும் வெற்றியை யோசிக்க கூடாது என்றும் கோலி பேசினார்.
முடிந்த கடினமான சூழலை நினைத்துக் கொண்டே இருக்காமல் நிகழ்காலத்தில் நிலைக் கொண்டு இருக்க முயற்சி செய்ய வேண்டும்,
நாம் அனைவருமே திறமையானவர்கள் இருந்த போதும் சில சமயங்களில் சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்படும் அதிலிருந்து வெளியேறி வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்று கூறினார்.