![images (67)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/images-67-7.jpeg)
கரண் ஜோஹர் நடிகை சமந்தாவிடம் தொடர்ந்து நாக சைதன்யா குறித்த கேள்விகளை கேட்டு வந்ததால் கடுப்பான சமந்தா தடாலடியான பதிலை தந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான கரண் ஜோஹர் “காபி வித் கரண் ” என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் தற்போது சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் கலந்து கொண்டனர்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/images-66-7.jpeg)
அந்நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் சமந்தாவை தூக்கி செல்வது மற்றும் நடனமாடுவது போன்ற காட்சிகள் எல்லாம் ப்ரோமோவாக வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம் கரண் ஜோஹர், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்த கேள்விகளை கேட்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/images-65-7.jpeg)
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சமந்தா, ”வேண்டுமென்றால் எங்களை ஒரே அறையில் அடைத்து வையுங்கள். ஆனால் அங்கு கூர்மையான பொருட்கள் எதுவும் இருக்கக்கூடாது. இந்த பதில் போதுமா? என்று தடாள் அடியாக பேசியுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/3466-samantha-ruth-prabhu-and-karan-johar-1.jpg)
இதன் மூலம் சமந்தாவின் கோபத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமந்தாவிற்கு இவ்வளவு கோபம் வருமா என்று அதிர்ச்சியுடன் கரண் ஜோஹருக்கு எதிரான கருத்துக்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருவதோடு மட்டுமின்றி இதனை வைரலாக்கி வருகின்றனர்.