SK21 பட குழுவினரை வியக்க வைத்த நடிகர் கமல்ஹாசனின் செயல் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது நடிகராக மட்டுமின்றி சொந்தமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “SK21” என்னும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

ராணுவ மேஜர் சம்பந்தப்பட்ட கதை அம்சத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பிலேயே படத்துக்கு திட்டமிட்ட பட்ஜெட்டை காட்டிலும் இன்னும் 20 கோடி அதிகமாக வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குனர் செய்தி அனுப்பியுள்ளாராம். இதனை தயாரிப்பு நிர்வாகிகள் கமலிடம் கூற அதற்கு அவர், “கூடுதலாக செலவாகும் தொகையை என் தனி கணக்கில் குறித்துக் கொள்ளுங்கள் என்றும் இயக்குனரை சுதந்திரமாக இயங்கவிடுங்கள் என்றும் கூறியுள்ளார்”. இவரது இந்த செயல் படக்குழுவினரை வியக்க வைத்ததுடன் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வைரலாகி வருகிறது.