பிக் பாஸ் 8-வது சீசன் களை கட்டி விட்டது. 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் செல்கின்றனர். அவர்களில் இரண்டு தேவதைகளை இங்கே பார்ப்போம்.
தன்னுடைய வித்தியாசமான குரலாலும், கலகலப்பான கிளிப் பேச்சாலும், ஜனநாயகத்தை கவர்ந்த தொகுப்பாளினி ஜாக்குலின். இப்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்துள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது விஜய் சேதுபதியால் திருவிழா ஆகியிருக்கிறது. மிக அசத்தலான ஆரம்பம் எனலாம். பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் ஒவ்வொரு போட்டியாளர்களையும், தனக்கே உரித்தான ஸ்டைலில் வரவேற்று, பரிசு பொருள் ஒன்றை கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி.
இந்த சூழலில்,18-வது போட்டியாளராக கலக்கலாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை ஜாக்குலின். இவர், தேன்மொழி பி.ஏ என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் விஜய் டிவியில் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு தான், விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
இவருடைய வித்தியாசமான மிக இனிய குரலே, இவருக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பை கொடுத்தது. மேலும், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக பயணித்து வந்தார். பின்னர், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்கிற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
அதன் பிறகும் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார். இளம் கதாநாயகர்களுக்கு ஹீரோயினியாக நடித்து கலக்க வேண்டும் என்பதே இவரது எதிர்பார்ப்பு.! ( எதற்கும் சொல்லி வைப்போம்..’ இவர்தான், இரண்டாம் நயன்தாரா.’ )
சின்னத்திரை நாடகங்களில் வில்லியாக அறிமுகமாகி, தற்பொழுது நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை தர்ஷிகா, இவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கேற்றுள்ளார்.
படிப்படியாய் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் தேவதை தான் தர்ஷிகா, ஒரு போட்டியாளராக இணைந்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் எப்போதுமே இரண்டாம் கட்ட நடிகையாகவே இருந்து வந்திருக்கிறேன். இதிலிருந்து மேலும் ஒரு உயர்வு வரவேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்’ என்றார் மலர்ந்த முகத்துடன்.
கவலைப்படாதீக., ரம்யா கிருஷ்ணனையே ஓவர்டேக் செய்ய வாழ்த்துகள் தர்ஷி.. ஹி..ஹி..