உலகம் முழுவதும் மீ டூ என்ற பேச்சு வைரலாகி இருக்கிறது. இந்த ஹாஸ்டேக்கின் வாயிலாக நடிகைகள் மற்றும் பல துறையை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அநீதிகளை பற்றி பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினியும் பாடகியுமான ஸ்ரீரஞ்சனி திரைப்பட நடிகரான ஜான் விஜய் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இது குறித்து ஸ்ரீரஞ்சனி பதிவிட்டுள்ள டீவீட்டில் கூறியிருப்பதாவது, நடிகர் ஜான் விஜய் எப்போதும் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். பெண்களிடம் வலுக்கட்டாயமாக உடலுறவு கோரும் மனப்பான்மை உடையவர்.
நான் ஒருமுறை அவரை பேட்டி எடுத்து இருந்தேன் அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அவர் நள்ளிரவில் எனக்கு போன் செய்திருந்தார். அப்போது எனக்கு நல்ல தூக்கம்.
அந்த நேரத்தில் அவர் என் பேட்டியை ஒளிபரப்பு செய்ததை ஏன் என்னிடம் கூறவில்லை என வழிந்தார். நான் காலை பேசுகிறேன் என கூறியும் அவர் விடவில்லை போனில் ஆபாசமாக பேச முயன்றார்.
நான் உங்கள் மனைவிக்கு போன் செய்வேன் என கூறியதும் தான் அவர் போனை கட் செய்தார் என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் இந்த சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பிறகு ஜான் விஜய்யின் மனைவி தன்னை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதாகவும் அடுத்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
#MeToo This incident happened in 2014 with actor John Vijay. Thanks hubby @NOTamitbhargav for the nudge. And thanks @Chinmayi @TheRestlessQuil for making noise. I’m speaking up too! #TimesUp @muthupradeep you know when this happened. pic.twitter.com/EfzqdgDvVH
— Sriranjani T S (@Sri_TS) October 17, 2018
https://platform.twitter.com/widgets.js
Shortly after my #MeToo tweet, John Vijay’s wife reached out to me to hear about it firsthand. She also messaged apologizing on his behalf. I truly appreciate the way she conducted herself (i.e. not blind siding) Now he has too. @NOTamitbhargav@Chinmayihttps://t.co/GPYGvtaLha
— Sriranjani T S (@Sri_TS) October 17, 2018
https://platform.twitter.com/widgets.js