சினிமாவில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து முழு நேர அரசியலில் இறங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று தனது கட்சியை பதிவு செய்து பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சினிமா கடமையை முடித்து கொண்டு மக்களுக்கு பணியாற்றும் வேலையில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். இதனால் விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.