ராஷ்மிகாவுடன் திருமணம் என தொடர்ந்து பரவி வரும் தகவலுக்கு உண்மையை உடைத்து விளக்கம் கொடுத்துள்ளார் விஜய் தேவர் கொண்டா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் நடிகைகளாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டா. கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த இவர்கள் காதலித்து வருவதாக அப்போதிலிருந்து தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது விஜய் தேவர் கொண்டா ராஷ்மிகாவுடன் திருமணம் என பரவிய தகவல் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை எனக்கு திருமணம் நடக்கும் என்பது போல மீடியோக்கள் நினைத்துக் கொண்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.
விஜய் தேவர் கொண்ட கொடுத்த இந்த விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இவர்கள் ரியல் ஜோடிகளாக ஆவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்