![images - 2024-06-15T124908.101](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-15T124908.101-696x391.jpeg)
அஜித்தால் விடாமுயற்சி பட சூட்டிங்கிற்கு சிக்கல் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடா முயற்சி என்ற திரைப்படம் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-15T124928.223.jpeg)
விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பட பிடிப்புகள் மட்டுமே என்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.
இதற்காக படக்குழு மொத்தமாக சேர்த்து வெளிநாட்டிற்கு உள்ளது. ஒரு மாதம் ஷூட்டிங் நடக்க உள்ள நிலையில் இதற்காக 13 கோடி ரூபாயை லைக்கா நிறுவனம் ஒதுக்கி உள்ளது.
இந்த சமயத்தில் அஜித் தனக்கே பாதி சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாக மீதி சம்பளம் கொடுத்தால் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் எனவும் லைகா நிறுவனத்திற்கு செக்மேட் வைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-15T124857.182.jpeg)
சூட்டிங் முடித்துவிட்டு டப்பிங் கேட்க முன்னதாக அஜித் தனது சம்பளத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று படக்குழுவினர் தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. லைக்காவின் இந்தியன் 2 படமும் இப்படி முடங்கிப் போயிருந்த நிலையில் தற்போதைய விடாமுயற்சிக்கும் அதே வில்லங்கம் உருவாகி உள்ளது.