டைட்டில் ஜெயிப்பாங்க என்று எதிர்பார்த்தால் 13 லட்சம் ரூபாய் பணத்துடன் போட்டியாளர் ஒருவர் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Vichitra Quit With 13 Lakhs From Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்னும் ஒரே வாரத்தில் இந்த நிகழ்ச்சி மொத்தமாக முடிவுக்கு வர உள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி அனுப்பப்பட்டுள்ளது.
பணம் ஏறவும் செய்யலாம் இறங்கவும் செய்யலாம் என்று பிக் பாஸ் அறிவித்துள்ள நிலையில் கடைசி வரை வந்து விசித்ரா டைட்டிலை வெல்வார் என்ற எதிர்பார்த்த நிலையில் அவர் 13 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் இது உண்மையா இல்லையா என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்த காட்சிகள் இன்றைய எபிசோட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.