பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விசித்ரா தினேஷ் மோதல் தொடர்ந்து உள்ளது.
தமிழ் சின்னத் தலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி அண்டா காகசம். இந்த நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான எபிசோடில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான சூட்டிங் EVP சிட்டியில் நடைபெற இருந்த நிலையில் விசித்ரா தினேஷ் தன்னுடைய டீமில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். பிறகு நிகழ்ச்சி குழுவினர் தினேஷிடம் பேச்சுவார்த்தை நடத்த அவர் விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து பேசியுள்ளார். வெளியில் வந்த பிறகும் பல பேட்டிகளில் அதைப் பற்றி பேசி உள்ளார்.
இதனால் என்னுடைய குடும்பத்தார் அதிகம் பாதிப்படைந்துள்ளனர் அதனால் அவருடன் சேர்ந்து விளையாடுவது சரியாக இருக்காது என சொல்லிவிட பிறகு நிகழ்ச்சி குழு விசித்ராவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய நான் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் என்னுடைய பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்க முடியாது என நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் விசித்ராவுக்கு பதிலாக ரவீனாவின் உறவினரை வைத்து போட்டிக்கான சூட்டிங் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.