ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது வசூலை வைத்து தீர்மானிக்கப்படுகிறதா? அல்லது படம், சிறந்த படைப்பு; இதற்கு விருது உறுதி என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறதா?
இரண்டும் இருந்தால், அத்திரைப்படம் போற்றுதலுக்கு உரியது. இதில், ‘வேட்டையன்’ படம், கமர்ஷியல் பேக்கேஜ், ‘இப்பவே கண்ணை கட்டுதே’ என்ற வைரல் வசனம் போல, ப்ரீ புக்கிங் கலெக்ஷன் அப்படி..! சரி, விஷயத்திற்கு வருவோம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், விருமாண்டி அபிராமி, துஷாரா விஜயன் என பலர் நடித்திருக்கிறார்கள்.
லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.
இந்தப் படம் முழுக்க முழுக்க ஞானவேலுவின் ஸ்டைலில் இல்லாமல், ரஜினிக்காக கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக, ‘மனசிலாயோ..’ பாடலில், மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து மீண்டும் கொண்டு வந்துள்ளார்.
ஞானவேலுவின் இயக்கம் என்பதால் இது கண்டிப்பாக ‘ஜெய் பீம்’ போன்ற தாக்கத்தை உருவாக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. டீசருக்கு எப்படி கலவையான விமர்சனம் கிடைத்ததோ, அதேபோன்ற விமர்சனம்தான் படத்தின் ட்ரெய்லருக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் இது மாஸ் ப்ளஸ் க்ளாஸாகத்தான் இருக்கும் என்று திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், வேட்டையன் படம் வரும் 10-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, வெளிநாடுகளில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 1.2 மில்லியன் டாலர் வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தொடங்கவிருக்கும் ‘ப்ரீ புக்கிங்’ இன்னும் வசூலை குவிக்க வாய்ப்புள்ளது என்பதால்; ‘வேட்டையன்’ படம் வசூலில் சக்கைப்போடு போடப்போவது உறுதி என்று ரஜினியின் ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
படத்தில், ரஜினிகாந்த் ஐபிஎஸ் அதிகாரியாக வந்து, அதிகாரத்தை கையிலெடுத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை என் கவுன்டர் செய்கிறார்.
இதற்கு வக்கீலாக வரும் அமிதாப் துணையிருக்கிறார்.? என டிரைலரிலேயே முழு படமும் பார்த்து?! கதை சொல்லி வருகிறார்கள் ஆர்வமிகு நெட்டிசன்ஸ். பார்க்கலாம் எப்டின்னு.!