மாநாடு படத்தில் வில்லனுக்கு தனுஷ் பெயர் வைக்கப்பட்டது ஏன் என வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

Venkat Prabhu Reveals Maanaadu Secrets : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார். அவருக்கு தனுஷ்கோடி என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் இது தனுசை வம்பு இழுக்கும் விதமாக இருப்பதாக கூறி வந்தனர்.

காரியம் வாகை சூட, காளையார் கோவில் வணங்குதும்.!

இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் இது குறித்து வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதாவது நீங்கள் நினைப்பதுபோல தனுஷ் மற்றும் சிம்புவுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சினை என்பது ரசிகர்களிடம் தான் உள்ளது.

Tamilcinema-விற்கு கிடைத்த பொக்கிஷம் அவரு – Director Vijay Speech | Chithirai Sevvaannam Press Meet

தனுஷை வம்பு இழுப்பதற்காக இந்த பெயர் வைக்கவில்லை. சிம்புவே இந்த படத்தில் என் தலைவன் தனுஷ்கோடி என சில இடங்களில் ஜாலியாக பேசி இருப்பார் என கூறியுள்ளார்.