பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவுக்கு வருவதாக வெளியான தகவலுக்கு வெண்பா விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அழகிய காதல் கதையாக உருவாக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நன் மதிப்பை கடந்த சில வருடங்களாக எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கண்ணம்மாவின் கர்ப்பத்தின் மீது பாரதி சந்தேகம் அடைய அவர் வீட்டை விட்டு வெளியே கிளம்பியதால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். வெண்பா பாரதி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் ரோகித் தான் உருவான கர்ப்பத்திற்கு பாரதியை அப்பாவாக்க முயற்சி செய்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வர பாரதியும் சரி என கூறியுள்ளார்.
இப்படியான நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரம் முடிவுக்கு வருகிறதா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப வெண்பாவிற்கு எண்டு கார்டா? அதற்கு வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார். இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போதைக்கு முடியாது என சொல்லப்படுகிறது.