![images - 2024-06-15T122418.700](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-15T122418.700-696x391.jpeg)
எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது தனக்கு பெரிய அவமானம் என பேசியுள்ளார் வேலராமமூர்த்தி.
சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னேற்றத்தை கண்டு ஒரு கட்டத்தில் முதலிடத்தை பிடித்து பிறகு தொடர்ச்சியாக அந்த இடத்தை தக்கவைத்து வந்தது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-15T122502.266.jpeg)
இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்த தொடங்கினார்.
இவரும் திறமையான நடிகர் என்றாலும் எதிர்நீச்சல் சீரியலில் இவரது நடிப்பு எடுபடவில்லை. இந்த நிலையில் சீரியல் முடிவுக்கு வந்த பிறகு அளித்த பேட்டி ஒன்றில் எதிர்நீச்சல் சீரியல் நடித்தது தனக்கு பெரிய அவமானம் என்று தெரிவித்துள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-15T122413.445.jpeg)
நல்ல கதையோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி இருந்தாலும் கடைசி வரைக்கும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.