வாரிசு மற்றும் துணிவு எந்த படத்திற்கும் பாரபட்சமே கிடையாது உதயநிதி ஸ்டாலினின் அதிரடியான முடிவு வைரல்.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் தான் விஜய் மற்றும் அஜித். ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர்களது நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் நேரடியாக மோத உள்ளது.

இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால் எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்ற கேள்வி தற்போது நிலவி வருகிறது.

இதற்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இரண்டு படங்களுமே சமமான திரையரங்குகளில் வெளியாகும். எந்த படத்திற்கும் பாரபட்சமே கிடையாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.