பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு இருந்த வாரிசு தள்ளி போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பெஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஜெயசுதா, குஷ்பூ, சம்யுக்தா, சங்கீதா என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அறிவித்தபடி தமிழில் மட்டுமே வெளியாகும் என சொல்லப்படுகிறது. தெலுங்குவில் பொங்கல் ரிலீஸ் ஆக பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அதிபுருஷ் திரைப்படம் வெளியாக உள்ளது.
தமிழில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது போல தெலுகுவில் பிரபாஸுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் காரணத்தினால் இந்த படத்தை தெலுங்கில் பொங்கல் முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.