மீரா மிதுனுக்கு சூர்யா கொடுத்த பதிலடி குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Vairamuthu Support to Suriya : சர்ச்சைக்குரிய நடிகையான மீரா மிதுன் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யாவை விமர்சனம் செய்து வருகிறார்.
இவர்களை மட்டுமல்லாமல் இவர்களின் குடும்பத்தாரைப் பற்றியும் தவறாக பேசி வருகிறார். இதுகுறித்து நடிகர் சூர்யா நேற்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.
அதாவது நான் ஏற்கனவே கூறியபடி தான் மீண்டும் கூறுகிறேன். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த நம் தரத்தை நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டிருந்தார். தனக்காக குரல் கொடுத்திருந்த இயக்குனர் பாரதிராஜாவிற்கும் அவர் நன்றி தெரிவித்து இருந்தார்.
சூர்யாவின் இந்த செயல்பாடு குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
சூர்யாவை வேதனைக்குள்ளாக்கிய விஷயம்.. வெளியான உருக்கமான பதிவு
இதுகுறித்த அவரது பதிவில் சுமத்தப்பட்ட பழியின் மீது
சூர்யாவின் அணுகுமுறை நன்று.
பக்குவப்பட்டவர்கள்
பதற்றமுறுவதில்லை;
பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு
கரை கைகலப்பதில்லை.
@Suriya_offl என பதிவிட்டுள்ளார்.
வைரமுத்துவின் இந்த பதிவிற்கு சூர்யா ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.