வாடிவாசல் ஷூட்டிங் குறித்து லண்டன் கிளம்பியுள்ளார் வெற்றிமாறன்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாக உள்ள படங்களில் ஒன்று வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படம் இன்னும் சூட்டிங் தொடங்காமல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் ஷூட்டிங் இருக்கானா இடங்களைத் தேர்வு செய்ய லண்டன் கிளம்பியுள்ளார். மேலும் தற்போது முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் கொஞ்ச நாட்கள் நடைபெற உள்ளது. இவற்றை முடித்த கையோடு பாடி வாசல் படத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரியவந்துள்ளது.
வெற்றிமாறன் லண்டன் கிளம்பி சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.