thalapthy 69 movie: pooja hegde salary details..
thalapthy 69 movie: pooja hegde salary details..

‘முகமூடி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் என்ன என்பதை, அவர் திருவாய் திறந்து மொழிந்தால் தெரியும். ஆனால், தற்போது வாங்கும் சம்பளம்.? கன்டினியூவா வாசிங்க புரியும்.

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய், அரசியலுக்கு வருவதைத் தொடர்ந்து, இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்தார்.

அவ்வகையில், கடைசிப்படமான ‘தளபதி-69’ படம்,கடந்த 4-ம் தேதி பூஜை போடப்பட்டு,.5-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக படக்குழுவினர் கேரளாவில் பையனூரில் முகாமிட்டுள்ளனர்.

‘ஒன் லாஸ்ட் சாங்’ என்ற அடைமொழியுடன் உருவாகும், இந்தப் பாடலுக்காக கிட்டத்தட்ட 500 டான்ஸ் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சேகர் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கிறார். அதோடு, இந்த பாடலுக்கு அசல் கோலார் பாடல் வரிகள் அமைத்து கொடுத்துள்ளதாகவும், விஜய் தனது சொந்த குரலில் பாடுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த படத்திற்காக விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,
பூஜா ஹெக்டே சம்பளம் ரூ.6 கோடி வரையில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலமாக ஹீரோயினாக வந்த பூஜா ஹெக்டேவிற்கு, கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் மூலமாக, மீண்டும் தமிழ் சினிமாவிலும் நடித்தார். இந்தப் படத்தில் அவரது ரோல் சரிவர பேசப்படவில்லை என்றாலும், தற்போது 2-வது முறையாக விஜய் உடன் இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு, தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் படத்திற்கு மட்டும் சம்பளத்தை கூட்டி கொண்டுள்ளார். மற்ற நடிகர்களின் படங்களுக்கு ரூ.5 கோடிக்கும் குறைவாகவே சம்பளம் பெறும் பூஜா ஹெக்டே, விஜய் படத்திற்கு ரூ.5 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு, ஜனநாயகம் என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக, தலைவா, சர்கார், லியோ உள்ளிட்ட படங்களில் அரசியல் குறித்து வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படம் விஜய்க்கு கடைசிப் படமாக அமைவதால், அரசியல் எழுச்சி வசனங்கள் தோட்டாக்களாய் சீறி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகம் எழுச்சி பெற, தீயாய் முழங்கும் வசனம் என்னவாக இருக்கும்?