விஜய் தாமதமாக உதவியது ஏன் என்பதை விஜய் தரப்பு வெளியிட்டுள்ளது.
Thalapathy Vijay Helps Secrets : சீனாவில் உருவான கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரே வழி ஊரடங்கு உத்தரவு தான் என்பதால் மத்திய அரசு அதனை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இதனால் பல குடும்பங்கள் பொருளாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. இதை இதனால் பிரபலங்கள் சாமானிய மனிதர்கள் வரை தங்களால் முடிந்த நிதி உதவியை அரசாங்கத்திற்கு அளித்து வந்தனர்.
ஆனால் தளபதி விஜய் இவ்வளவு நாளாக அமைதி காத்து சில தினங்களுக்கு முன்னர்தான் 1.30 கோடி ரூபாய் நிவாரணமாக அளித்திருந்தார்.
விஜய் இவ்வளவு தாமதமாக உதவுவதற்கான காரணம் என்ன என்பது குறித்த கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வந்தது.
இந்த நிலையில் இது குறித்து விஜய் தரப்பில் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதால் வருமான வரித்துறையினர் அவரது வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளனர்.
விஜய் சரியான கணக்குகளையும் ஆதாரத்தையும் சமர்ப்பித்த பின்னரும் வங்கிக்கணக்கு முடக்கத்திலேயே இருந்துள்ளது. அதன் பின்னர் விஜய் வருமான வரித் துறைக்கு கோரிக்கை வைத்த பின்னர் தான் அவரது கணக்கு ரிலீஸ் செய்யப் பட்டுள்ளது.
இதனால்தான் அவர் உதவுவதற்கு இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டது என கூறப்பட்டுள்ளது.