சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்த தன்னுடைய ரசிகர் பாலாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார் விஜய்.
Thalapathy Vijay Condolences to Bala : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜய் ரசிகர் பாலா என்பவர் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணம் விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் தளபதிவிஜய் பாலாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என கூறி வந்தனர்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது என்பது கடினமான ஒன்றாக இருப்பதால் தளபதி விஜய் தொலைபேசி வாயிலாக பாலாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் தளபதி விஜய்க்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.