தமிழக அரசை வெளுத்து வாங்கியுள்ளார் தளபதி விஜய்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images.jpeg)
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் மேலும் ஒரு படத்தில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதுவரை அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டுமே சொல்லி வந்த விஜய் தற்போது முதல் முறையாக கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து காட்டமாக பதிவு செய்துள்ளார்.
இது குறித்த பதிவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/thalapathy-vijay-kallakurichi-1718867625-1024x576.jpg)
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.