தமிழ்ப் பண்பாட்டில் தொட்டில் முதல், காடு வரை பாட்டு உண்டு. இடையில் வரும் கட்டிலுக்கும் பாட்டு உண்டு. பாட்டு என்பது வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றது. அது, அழவைக்கும், ஆனந்தப்படுத்தும், துக்கப்படுத்தும், தூங்க வைக்கும், விழ வைக்கும், எழ வைக்கும்.!
அவ்வகையில், தளபதி விஜய் தனது இறுதிப் படத்தில் சொந்தக் குரலில், ‘ஒன் லாஸ்ட் ஸாங்..’ என்றொரு பாட்டு பாடியிருக்கிறார். அது குறித்து பார்ப்போமா, வாங்க..
தளபதி விஜய் தனது இரு திரைப்பட பணிகளை முடித்த பிறகு, திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழு நேர அரசியல் தலைவராக களமிறங்க போகிறேன் என்கின்ற அறிவிப்பு.. உண்மையில் அவருடைய திரையுலக ரசிகர்களுக்கு கசப்பான செய்திதான். இருந்தாலும், அரசியல் ரீதியாக அவரை பின் தொடர்பவர்களுக்கு, இது மிகப்பெரிய இனிப்பான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
அவர் சொன்ன மாதிரியே ஏற்கனவே தனது 68-வது திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்து, வெளியாகி உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது.
அந்த திரைப்பட பணிகளை முடித்த வெகு சில வாரங்களிலேயே, தன்னுடைய 69 ஆவது மற்றும் இறுதி திரைப்படத்திற்கான பணிகளை தளபதி விஜய் தொடங்கி இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி சென்னையில் தளபதி 69 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. பிரபல நடிகை பூஜா ஹெக்டே தளபதி விஜய் உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
முன்னதாக ‘தல’ அஜித்தை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்க உள்ளார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ஒரு திரைப்படமாக இது மாறி இருக்கிறது. தளபதி 69 திரைப்படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. தன்னுடைய திரைப்படத்திற்காக தயாராகி வரும் அதே நேரம், இந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் தனது ‘தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்’ முதல் மாநில மாநாட்டிற்காகவும் முழு வீச்சில் தயாராகி வருகின்றார் விஜய்.
இந்த சூழலில் “ஒன் லாஸ்ட் சாங்” என்ற தலைப்பில் தளபதி விஜய் நடிக்கும் அவரது 69 ஆவது திரைப்படத்தின் முதல் பாடல், படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாடலாசிரியர் அசல் கோலாறு இந்த பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையில் தளபதி விஜய் இந்த பாடலை பாடியிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட க்ரூப் டான்ஸர்கள் நடனம் ஆடி இருப்பதாகவும் திரை வட்டாரம் தெரிவிக்கிறது.
அரசியலுக்கே உரிய எழுச்சியான வார்த்தைகள், பாட்டுக்குள் தெறிக்குமோ.? கேட்கலாம்.. வெயிட்டிங்.!