Tamil Nadu Election : வரும் ஜனவரியில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
18 எம்.எல். ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் , நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி , தோல்வி ஆட்சியிலும் பிரதிபலிக்கும் என்பதால், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் இன்று தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களுடன் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சரும் ஆன எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதில் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். ஆலோசனையில் 20தொகுதிகளில் வெற்றி பெறுவது எப்படி? என்ன செய்யவேண்டும், பொதுக்கூட்டம் நடத்துவது போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 10மணிக்கு நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.