Rajini & Tamilisai

Rajini & Tamilisai : நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 தமிழர்கள் குறித்து கூறிய கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவரிடம் , முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, 7 தமிழர்கள் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ” யார் அந்த 7 பேர். 7 பேர் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன் ” என்று கூறினார்.

அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அவரின் இந்த கருத்து குறித்து பல தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.

ரஜினிக்கு எதிராக பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் கருத்து குறித்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது, ” ரஜினியிடம் மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். ரஜினியிடம் மீண்டும் அந்த கேள்வி கேட்டிருந்தால் வேறு பதில் வந்திருக்கும்.

முதல்முறை ரஜினி சரியாக கேள்வியை உள்வாங்கி இருக்கமாட்டார். மேலும், அவருக்கு இந்த கேள்விக்கான பதில் தெரியாமல் இருந்திருக்காது “இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.