Tamilisai Soundarjan : தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு அமெரிக்காவில், ” இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் ” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் வழங்கிய இந்த விருதை , நேற்று நடந்த விழாவில் அமெரிக்க நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர் ராஜா கிருஷ்ணமூர்த்தி அவ்விருதை வழங்கினார்.
குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் உலக அளவில் பல துறைகளில், சிறப்பாக செயல்படும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இவ்விருதை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு மருத்துவம், அரசியல், சமூகம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படும் தமிழக பா. ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்-க்கு இந்த விருதை வழங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விருதை பெற்று கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் பேசுகையில், “
தமிழ் பெண்ணான நான் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழரான செனட்டர் ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் இருந்து இவ்விருதை பெற்று கொண்டது மிக மகிழ்ச்சியான தருணம்.
இவ்விருதை தமிழக மக்களுக்கும், பா. ஜ.க தொண்டர்களுக்கும் அர்பணிக்கிறேன்.
மக்களுக்கு சேவை செய்ய மேலும் இந்த விருது எனக்கு ஊக்கமளிக்கிறது ” இவ்வாறு தெரிவித்தார்.