Tamil Perarsu Party : தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் ஒருவர் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அது குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
தமிழக அரசியலில் முக்கிய புள்ளிகளாக திகழ்ந்தவர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அவர்கள். இவர்கள் இருவரின் மறைவுக்கு பிறகு ரஜினி, கமல், பிரகாஷ் ராஜ் என பலர் அரசியலில் குதித்து விட்டனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது இயக்குனரான கெளதமன் அவர்களும் தமிழ் பேரரசு கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இது குறித்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதிவிட இதனை பார்த்த பிரசன்னா கோபமாக தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதாவது நாட்ல முளைக்கின்ற பாதி களைகளுக்கு பத்திரிகைகளே காரணம். கண்டதையும் செய்தியாக்குறீங்க.
அதான் கன்னா பின்னானு கெளம்புறாங்க. நீங்க நிறுத்துங்க. அவனுங்க தானா நின்று வாங்க என பதிவிட்டுள்ளார்.
நாட்ல மொளக்கிற பாதி களைகளுக்கு பத்திரிகைகளே காரணம். கண்டதையும் செய்தியாக்குறீங்க. அதான் கன்னாபின்னானு கெளம்புறாங்க. நீங்க நிறுத்துங்க. அவனுங்க தானா நின்றுவாங்க
— Prasanna (@Prasanna_actor) February 25, 2019