T20 Ind Vs Aus :

ஆஸ்., இந்தியா இடையிலான முதல் டி-20 போட்டி நேற்று நடைப்பெற்றது. அதில் இந்திய அணி 4 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்., விடம் தோல்வியை கண்டது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்., அணி 16 ஓவருக்கு 153 ரன்கள் எடுதிருந்தது. இதற்கிடையில் மழை குறிக்கிடவே 20 ஓவர் 17 ஓவராக குறைக்கப்பட்டது.

இறுதியில் 17 ஓவர் முடிவில் 4 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்., அணி 158 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்., அணி 158 ரன்கள் எடுதிருந்த போதிலும் இந்தியாவிற்கு 174 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது.

17 ஓவரில் 174 ரன்கள் என்ற கடின இலக்கை கொண்டு தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோகித் களம் இறங்கினார்கள்.

நிதானமாக இருந்து தவான் ரன் சேர்க்க தொடகினார், ஆனால் ரோகித் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களம் இறங்கிய கோலி மற்றும் ராகுல் 4, 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தவான் 28 பந்துகளில் 8 பவுண்டரிகள்,1 சிக்சர்6 ரன்கள் தனது அரைசதத்தை அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய தவான் 76 எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி சிறப்பாக விளையாடி அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டினார்.

சிறப்பாக விளையாடியும் கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட போது ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 7 விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆஸ்., அணியிடம் தோல்வி கண்டது. அடுத்த ஆட்டம் 23-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.