சூர்யாவின் “24” படத்தின் பார்ட் 2 எடுக்கப் போவதாகவும். அதில் ஆத்தரேயா என்னும் வில்லன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் அண்மையில் வெளியான கமலின் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தியிருப்பார்.

அதேபோல் தற்போது சூர்யா மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் நடிப்பில் 2015ஆம் ஆண்டில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான “24” திரைப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்த அசத்தியிருப்பார்.

அதில் வில்லனாக ஆத்ரேயா என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் இப்படத்திற்கான இரண்டாம் பாகத்தின் கதையை இயக்குனர் விக்ரம் குமார் உருவாக்கி வருவதாக அண்மையில் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் வரும் ஆத்ரேயா என்னும் வில்லன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இக்கதையை உருவாகி வருவதாக தெரிவித்திருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் மீண்டும் வில்லனாக சூர்யாவை பார்ப்பதற்கு அதிக ஆர்வத்தோடு உற்சாகமடைந்துள்ளனர்.