வணங்கான் படத்தைப் போல புறநானூறு படத்தில் இருந்து சூர்யா விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று இன்று நாளை ரவிக்குமார் இயக்கத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

மேலும் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் இருந்து பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்திலிருந்து அவர் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கு முன்னதாக பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா பாதியில் படத்திலிருந்து வெளியேறியது போல தற்போது போல நான் ஒரு படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் படத்தின் நடிப்பு இருப்பதாகவும் கேஜிஎப் படத்தை தயாரித்த நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் விவரங்கள் வெளியாகி உள்ளன. 

புறநானூறு படத்தில் இந்தி எதிர்ப்பு குறித்த காட்சிகள் உள்ளதால் சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.