ரூபாய் 80 கோடிக்கு விற்பனையாகியுள்ளது நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள்.
Suriya Movies Bussiness Update : சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் ஜெய்பீம் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன. ஜெய்பீம் திரைப்படத்தை ஞானவேல் இயக்க சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் மட்டுமல்லாமல் உடன்பிறப்பே, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஓ மை டாக் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நான்கு படங்களையும் சேர்த்து அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு ரூபாய் 80 கோடிக்கு விற்றிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவற்றில் ஜெய் பீம் திரைப்படம் மட்டுமே ரூபாய் 37 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாளை என்று, ஒன்று கிடையாது. இன்று நிஜம் : ஓஷோ
இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இருப்பினும் சூர்யா OTT ரிலீஸால் லாபம் கிடைக்கிறது என பழசை மறந்து விட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.