![images (86)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2021/08/images-86-696x387.jpeg)
படிப்பதற்கு சூர்யாவிற்கே சீட்டு இல்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Suriya in Studies History : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த பணிகளை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
அம்மன் திருக்கோலமும், இந்த வார விசேஷமும்..
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2021/08/images-87.jpeg)
இந்த நிலையில் நடிகர் சூர்யா லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது 1992-ல் எனக்கு கல்லூரியில் சீட் இல்லை என தெரிவித்தார்கள். என்னுடைய அப்பா கல்லூரி நிர்வாகத்தை அணுகி காரணம் கேட்டபோது பெரிய பிரபலங்களின் பிள்ளைகளுக்கு சீட் கொடுத்தால் பாதியிலேயே படிப்பை விட்டு நின்று விடுகிறார்கள். நாங்கள் சீட்டை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறினர்.
இதனையடுத்து நடிகர் சூர்யா நான் பாதியில் நிற்க மாட்டேன் என உறுதிமொழி கொடுத்த பிறகே அவருக்கு சீட் கொடுக்கப் பட்டதாக இந்த கல்லூரி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரியில் படிக்கும்போது ஒருநாள் சுற்றுலாவாக பாண்டிச்சேரி சென்றது, நண்பர்களுடன் இணைந்து எத்திராஜ் காலேஜ் செல்வது போன்றவை மறக்க முடியாத நிகழ்வுகள் என தெரிவித்துள்ளார்.
நான் விஜய் ரசிகர் தான்…ஆனால்? – Vera Maari Song Public Reactions