Suriya Released Kantha Sasti Kavasam
Suriya Released Kantha Sasti Kavasam

கேரள விமான விபத்து, மீரா மிதுனுக்கு பதிலடி போன்ற பதிவுகளை தொடர்ந்து நடிகர் சூர்யா சோகமான நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ளார்.

Suriya About Munnar Landslide : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நேற்று கேரளாவில் நடந்த விமான விபத்து குறித்து பதிவிட்டிருந்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மீரா மிதுன் பற்றிய பேச்சக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியிருந்தார்.

அதாவது தரமற்ற விமர்சனங்களுக்கு பதில் அளித்து நம் தரத்தை நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம் என கூறியிருந்தார். மேலும் தனக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்த பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சூர்யாவை வேதனைக்குள்ளாக்கிய விஷயம்.. வெளியான உருக்கமான பதிவு

இதனையடுத்து தற்போது மூணாறில் நடந்த நிலச்சரிவு குறித்து பதிவிட்டுள்ளார். இது குறித்த அவரது பதிவில் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது.

குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் பிறந்த மண்ணை விட்டு பிரிந்து வேலை செய்தவர்கள் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து இறந்து போனது தாங்க முடியாத துயர நிகழ்வு‌. நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கேற்று கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.