நான் பிரமாதமான நடிகன் அல்ல ஒவ்வொரு முறையும் சிறந்த நடிப்பை கொடுக்க வேண்டுமென மெனக்கெடுகிறேன்.
Suriya About His Acting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா சூரரைப்போற்று படம் பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் நான் ஒன்றும் பிரமாதமான நடிகன் அல்ல என தெரிவித்துள்ளார்.
சினிமாவில் எனக்கு இந்த இடம் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு முறையும் புதிய முயற்சி கையிலெடுக்கும் போது பயம் ஏற்படுகிறது.
கேமரா முன்பு நின்றதும் உடனே நடிக்க தெரியாது. அந்த கதாபாத்திரமாகவே வாழ வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெடுவேன் என தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அனைவரும் நடிகர் சூர்யாவை நடிப்பின் நாயகன், நடிப்பின் அரக்கன் என கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே.