Suriya 38 Heroine – சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர்.
தொடர்ந்து முன்னணி ஹீரோயின்களுடன் நடித்த சூர்யா தற்போது இவருடன் இணைந்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்கள். படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் கையாளுகிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார்.